கொழும்பில் ரயில் மீது கண்ணிவெடி தாக்குதல்: 300 பயணிகள் தப்பினர்
கொழும்பு: கொழும்பில் பயணிகள் ரயில் மீது நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திரிகோணமலையில் இருந்து கொழும்பு சென்ற ரயில் நேற்றிரவு 8.30 மணியளவில் கண்ணி வெடியில் சிக்கியது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கரமாக வெடித்து சிதறியதில் ரயில் என்ஜினும், தண்டவாளமும் சேதமடைந்தன.
ஆனால், இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த 300 பயணிகளும் உயிர் தப்பினர். விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
பிரபாகரன் காயம் உண்மை-இலங்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விமானப்படை தாக்குதலில் காயமடைந்தது உண்மை என்று இலங்கை ராணுவம் மீண்டும் கூறியுள்ளது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தார் என்ற செய்தியை கொழும்பிலிருந்து வெளியாகும் தி நேஷன் இதழ் வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த செய்தியை விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் மறுத்ததுடன், பிரபாகரனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை, அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியதாவது,
கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் என்ற இடத்தில் கடந்த மாதம் 26ம் தேதி மாலை 5.25 மணிக்கு இலங்கை விமானப்படை விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியது.
அப்போது பதுங்கு குழி சரிந்ததில் அதிலிருந்த பிரபாகரன் காயமடைந்து விட்டார். ஆனால் அவருக்கு எந்தளவு காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என்றனர்.
பிரபாகரன் குறித்து இலங்கை எத்தனையோ புரளிகளை இதற்கு முன்பும் கிளப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியும் புரளியா என்பது தெரியவில்லை.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications