தமிழகத்தில் வசிக்கும் மலேசிய குடிமக்கள், மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

மலேசியாவில் சம உரிமை கோரி தமிழர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வசிக்கும் மலேசிய நாட்டவர்களுக்கும், மாணவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மலேசிய துணைத் தூதரக அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலேசியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் தங்கியிருக்கும் இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியாத அளவுக்கு ரகசியமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மலேசிய துணைத் தூதரக அலுவலகத்தில் கேட்டபோது, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில், மலேசிய அரசு பாதுகாப்பு கோரி எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை.
இருப்பினும் பரஸ்பர நட்புறவின் அடிப்படையில், தமிழக அரசே, தமிழகத்தில் வாழும் மலேசியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பாதுகாப்பு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
டிஜிபி அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் வசிக்கும் மலேசிய குடிமக்களுக்கு எந்தவித ஆபத்தும் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இது சாதாரண விஷயம்தான். முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மலேசியாவைச் சேர்ந்த 9 மாணவர்கள், 6 மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். அனைவரும் அவர்களது உறவினர் வீடுகளில் தங்கிப் படிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரும்படி மாநகர காவல்துறை ஆணையர் நந்தகோபாலன் உத்தரவின் பேரில், கூடுதல் துணை ஆணையர் ஜெயக்குமார் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications