சென்னை திரும்பினார் முதல்வர் கருணாநிதி
சென்னை: டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி இன்று பிற்பகல் சென்னை திரும்பினார்.
கடந்த 18ம் தேதி முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றார். 19ம் தேதி நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
இதுதவிர பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும், பல்வேறு தலைவர்களும் முதல்வரை தமிழ்நாடு இல்லம் வந்து சந்தித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் அவர் பேச்சுவார்த்தையும் நடத்தினார். மேலும் தமிழகத்திற்கு மின்சாரம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடமும், மன்மோகன் சிங்கிடமும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார். அவருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் பொன்முடி, ராஜா, ஏ.வ. வேலு ஆகியோரும் சென்னைக்கு வந்தனர்.












Click it and Unblock the Notifications