மழை வெள்ள நிவாரணத்தில் தாமதம்: மக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உரிய நிவாரணப் உதவிகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் மழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள மெய்காவல்புத்தூர் என்ற கிராமம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வெள்ள நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஜெயங்கொண்டம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் வெள்ள நிவாரண உதவிகள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சேவியர் கிறிஸ்டோ நாயகம் வெள்ளம் பாதித்த பகுதியைப் பார்வையிட வந்தபோது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை என்று முறையிட்டனர்.
இதையடுத்து உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகும் கூட அதிகாரிகள் அப்பகுதியை கண்டுகொள்ளாமல் விட்டதால் ஆத்திரமடைந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications