மழை வெள்ள நிவாரணத்தில் தாமதம்: மக்கள் சாலை மறியல்

Subscribe to Oneindia Tamil


ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உரிய நிவாரணப் உதவிகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் மழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள மெய்காவல்புத்தூர் என்ற கிராமம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வெள்ள நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஜெயங்கொண்டம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் வெள்ள நிவாரண உதவிகள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சேவியர் கிறிஸ்டோ நாயகம் வெள்ளம் பாதித்த பகுதியைப் பார்வையிட வந்தபோது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை என்று முறையிட்டனர்.

இதையடுத்து உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகும் கூட அதிகாரிகள் அப்பகுதியை கண்டுகொள்ளாமல் விட்டதால் ஆத்திரமடைந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+