சிறையிலிருந்து தப்பி வந்த கைதி தூக்குப் போட்டு தற்கொலை
கரூர்: பரோலில் வெளிவந்து தப்பிய ஆயுள் தண்டனைக் கைதி, வயல் வெளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் குப்புரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்கிற ரங்கராஜ். இவர் கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்றவர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர் பரோலில் வந்தார். ஆனால் பரோல் காலம் முடிந்த பிறகு சிறைக்குப் போகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரங்கராஜ், குளித்தலை அருகே உள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள ஒரு வயலில், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இதைப் பார்த்த கிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications