காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறும் - மேலிடப் பார்வையாளர்

Subscribe to Oneindia Tamil


சென்னை: தமிழக காங்கிரஸ் அடுத்த ஆண்டில் இருந்து வலுவான கட்சியாக மாறும் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் கூறியுள்ளார்.

சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொண்டர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும், அவர்களை சந்திக்கவும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.

கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வுப் பூர்வமாக விரும்புகிறார்கள். அதற்கு வேண்டிய முயற்சிகள் எடுக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து தமிழக காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதைப்பற்றி நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் நாங்கள் அமைத்த குழுவின் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்றமே அவர்களை விடுவித்தாலும் காங்கிரஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். எங்களது உட்கட்சி பிரச்சனையை வெளிப்படையாக பேச விரும்பவில்லை.

மத்திய அரசின் 3 ஆண்டு ஆட்சியின் சாதனைகள், காங்கிரசின் திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்துச் செல்லவேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் காங்கிரசின் எதிரிகள். தீவிரவாத அமைப்புகளை காங்கிரஸ் கண்டிப்பாக எதிர்க்கும் என்றார் அருண்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+