சுனாமி.. 3வது ஆண்டு
-சுதா அறிவழகன்
([email protected])
சுழன்றடித்த சுனாமியின் கோரக் கரங்களில் சிக்கி ஆசிய கண்டமே அலறிய 3வது ஆண்டு நினைவு தினம் இன்று.
அதுவரை கேள்விப்பட்டிராத அந்த வார்த்தை, 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஆசிய கண்ட நாடுகளை அடித்துப் போட்டு விட்டுப் போனது. திடீரென பொங்கி வந்த கடல் அலைகளில் சிக்கி கன நேரத்தில் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்க்கையை இழந்த சோக தினம் இது.
ஆழிப்பேரலை என்று கூறப்படும் சுனாமி குறித்து அதுவரை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை. டிசம்பர் 25ம் தேதி நள்ளிரவில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட மிகப் பயங்கர பூகம்பம், கடலை கொந்தளிக்க வைத்தது.
ஆசிய நாடுகளின் கடலோரப் பகுதிகள் புரட்டிப் போடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து தெற்காசியாவின் கடை முனை வரை பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கி விட்டுத்தான் சுனாமியின் கோரம் முடிவுக்கு வந்தது.
என்ன நடந்தது என்றே தெரியாமல் பல அப்பாவி உயிர்கள் பறிபோன பயங்கர நாள்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மயானமாயின. எங்கும் இறந்த உடல்கள், அந்த உயிர்களுக்குச் சொந்தமான உறவுகளின் கதறல்கள் என இடிந்து போனது தமிழகம்.
நாகை, கடலூர் மாவட்டங்கள் ஒரே நாளில், சில மணித் துளிகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து நின்றது.
சென்னை மெரீனா கடற்கரையே கடலுக்குள் போனது. வேளாங்கண்ணியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முடித்து விட்டு கடற்கரையில் சந்தோஷமாக குளித்தும், குதூகலித்தும் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் கடலின் கோர தாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
ஆற்ற முடியாத சோகத்தை ஏற்படுத்தி விட்ட சுனாமி தாக்கியதன் 3வது ஆண்டு நினைவு நாளை இன்று ஆசிய நாடுகள் கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க நினைவு கூறுகின்றன.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் இறந்த தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நினைவிடங்களில் படையல் வைத்து மறைந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகள் செய்து வருகின்றனர். சென்னை முதல் குமரி முனை வரை கடலோர கிராமங்கள் அனைத்திலுமே சுனாமி நினைவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல ஊர்களில் அமைதிப் பேரணிகளும், இரங்கல் கூட்டங்களும் நடந்து வருகின்றன.
வேண்டாம் இன்னும் ஒரு சுனாமி என்பதே அந்த கனத்த இதயங்களின் மனதில் குடி கொண்டுள்ள ஒரே பிரார்த்தனை.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications