குற்றால அருவியில் அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம்
தென்காசி: குற்றாலம் அருவிப் பகுதிகளில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பது என குற்றாலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சியின் தலைவர் ரேவதி ராமையா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிர்வாக அதிகாரி ராஜையா, துணைதலைவர் ராமையா, உறுப்பினர்கள் மாடசாமி, கல்யாணி அம்மாள், மேரி ஸ்டெல்லா, சுசிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
அருவிப் பகுதிகளில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் விதமாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். குற்றாலத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி மெயின் அருவியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
குற்றாலம் பேரூராட்சியில் பணிபுரியும் கீழ்நிலை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும். அருவிப் பகுதியில் ரூ. 2.5 லட்சம் செலவில் அதிக சக்தி வாய்ந்த விளக்குகள் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications