அதிக அளவில் மது கொடுத்து ஏட்டு அடித்துக் கொலை
செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் தலைமைக் காவலருக்கு அதிக அளவில் மது கொடுத்து மயக்கமடையச் செய்து அவரை அடித்துக் கொலை செய்ததாக, காவல் நிலையத்தில் சிறு சிறு வேலைகள் செய்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு வடுகன்பற்று கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் செய்யூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு பவானி என்ற மனைவியும், சுரேந்திரன் என்ற மகன், மோகனப்பிரியா என்ற மகள் உள்ளனர்.
முருகேசன் செய்யூரில் அறை எடுத்துத் தங்கி வேலை பார்த்து வந்தார். மனைவி, குழந்தைகள் செங்கல்பட்டு காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு முருகேசன் இரவில் சாப்பிட சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அவரது உயிரற்ற உடல், செய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே உள்ள சாலையில் கிடந்தது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். மாவட்ட எஸ்.பி. பெரியய்யாவும் வந்தார். முருகேசன் உடல் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
முருகேசனைக் கொன்று உடலை சாலையில் போட்டு விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், செய்யூர் காவல் நிலையத்தில் சிறு சிறு வேலைகள் செய்து வந்த கண்ணன் என்பவர்தான் முருகேசனைக் கொன்றது தெரிய வந்தது. அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
அவருக்கு உதவியாக இருந்ததாக அழகு, வேலு, இளங்கோவன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பசுபதி ராசக்காபாளையம் படத்தில் ரஞ்சித், காவல் நிலையத்தில் எடுபிடி வேலைகள் பார்ப்பவர் போல நடித்திருப்பார். அதேபோலத்தான் கண்ணனும் செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் போல செயல்பட ஆரம்பித்துள்ளார் கண்ணன். இதையடுத்து இனிமேல் காவல் நிலையத்திற்குள் வரக் கூடாது, எந்த வேலையாக இருந்தாலும் வெளியிலிருந்தபடி கேட்டு அதைச் செய்ய வேண்டும் என முருகேசன் கண்டிப்பாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது நண்பர்களிடம் இதைக் கூறியுள்ளார். பின்னர் முருகேசனைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு சாப்பிடச் சென்ற முருகேசனை வழிமறித்து மது அருந்தக் கூப்பிட்டுச் சென்றுள்ளனர். அங்கு அளவுக்கு அதிகமாக அவரை மது அருந்தச் செய்தனர். அரை மயக்க நிலைக்குப் போய் விட்ட முருகேசனை அருகில் உள்ள சுடுகாட்டுக்குக் கூட்டிச் சென்று அங்கு வைத்து அடித்துக் கொன்றனர்.
பின்னர் உடலை காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர். பின்னர் வழியில் சாலையிலேயே போட்டு விட்டு போய் விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications