Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிக அளவில் மது கொடுத்து ஏட்டு அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil


செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் தலைமைக் காவலருக்கு அதிக அளவில் மது கொடுத்து மயக்கமடையச் செய்து அவரை அடித்துக் கொலை செய்ததாக, காவல் நிலையத்தில் சிறு சிறு வேலைகள் செய்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு வடுகன்பற்று கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் செய்யூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு பவானி என்ற மனைவியும், சுரேந்திரன் என்ற மகன், மோகனப்பிரியா என்ற மகள் உள்ளனர்.

முருகேசன் செய்யூரில் அறை எடுத்துத் தங்கி வேலை பார்த்து வந்தார். மனைவி, குழந்தைகள் செங்கல்பட்டு காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு முருகேசன் இரவில் சாப்பிட சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அவரது உயிரற்ற உடல், செய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே உள்ள சாலையில் கிடந்தது.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். மாவட்ட எஸ்.பி. பெரியய்யாவும் வந்தார். முருகேசன் உடல் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முருகேசனைக் கொன்று உடலை சாலையில் போட்டு விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், செய்யூர் காவல் நிலையத்தில் சிறு சிறு வேலைகள் செய்து வந்த கண்ணன் என்பவர்தான் முருகேசனைக் கொன்றது தெரிய வந்தது. அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

அவருக்கு உதவியாக இருந்ததாக அழகு, வேலு, இளங்கோவன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பசுபதி ராசக்காபாளையம் படத்தில் ரஞ்சித், காவல் நிலையத்தில் எடுபிடி வேலைகள் பார்ப்பவர் போல நடித்திருப்பார். அதேபோலத்தான் கண்ணனும் செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் போல செயல்பட ஆரம்பித்துள்ளார் கண்ணன். இதையடுத்து இனிமேல் காவல் நிலையத்திற்குள் வரக் கூடாது, எந்த வேலையாக இருந்தாலும் வெளியிலிருந்தபடி கேட்டு அதைச் செய்ய வேண்டும் என முருகேசன் கண்டிப்பாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது நண்பர்களிடம் இதைக் கூறியுள்ளார். பின்னர் முருகேசனைத் தீர்த்துக் கட்ட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று இரவு சாப்பிடச் சென்ற முருகேசனை வழிமறித்து மது அருந்தக் கூப்பிட்டுச் சென்றுள்ளனர். அங்கு அளவுக்கு அதிகமாக அவரை மது அருந்தச் செய்தனர். அரை மயக்க நிலைக்குப் போய் விட்ட முருகேசனை அருகில் உள்ள சுடுகாட்டுக்குக் கூட்டிச் சென்று அங்கு வைத்து அடித்துக் கொன்றனர்.

பின்னர் உடலை காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர். பின்னர் வழியில் சாலையிலேயே போட்டு விட்டு போய் விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+