கோலப்பன் குழு பரிந்துரையை அமல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
மன்னார்குடி: கோலப்பன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி விவசாயத் தொழிலாளர்கள் மேம்பாட்டிற்காக கோலப்பன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.
விவசாய தொழிலாளர்களுக்கான நலவாரியம் உள்ளிட்ட 43 பரிந்துரைகளை இந்தக் குழு பரிந்துரைத்தது. இதில் குறைந்த பட்சக் கூலி மற்றும் நலவாரியம் ஆகிய பரிந்துரைகள் மட்டுமே ஏற்கப்பட்டன.
இந்த பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் இருந்தும் முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள தபால் நிலையத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், தொழிலாளர் சங்க நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் முதல்வருக்கு எழுதப்பட்ட அஞ்சல் அட்டைகளை பெட்டியில் போட்டனர்.












Click it and Unblock the Notifications