For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்டியில் சேர்த்து வைக்கும் பணத்தால் பலனில்லை-ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News


திருச்சி: வீடுகளில் பெட்டியில் சேர்த்து வைக்கும் பணத்தால் நாட்டுக்கு எந்தவித பலனும் இல்லை என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

திருச்சியில் பாண்டியன் கிராம வங்கியின் 179வது கிளை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது,

கடன் தருவது தான் வங்கிகளின் தர்மம் ஆகும். அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றபடி விவசாயிகள், பெட்டிக் கடை வைப்பவர்கள் போன்றவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள 50, 100 ரூபாயைக் கூட வங்கியில் டெபாசிட் செய்யலாம். வங்கிகளில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மட்டுமே பணம் போட வேண்டும் என்பது கிடையாது.

வீட்டில் பெட்டியில் சேர்த்து வைக்கும் பணத்தினால் நாட்டுக்கு எந்தவித பலனும் இல்லை என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X