பெனாசிர் கொலையாளிகளின் பேச்சு வெளியீடு

அந்த உரையாடலில் பெனாசிர் கொல்லப்பட்டதற்கு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலில் மசூத், மெளலவி சாஹிப் என்கிற தீவிரவாதியும் பேசியுள்ளனர். இக்ரமுல்லா என்பவரும், பிலால் என்பவரும்தான் பெனாசிரைக் கொன்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உரையாடல் விவரம் வருமாறு:
மெளலவி சாஹிப் (எம்.எஸ்): அஸலாமு அலைக்கும்.
பைதுல்லா மசூத் (பி.எம்): வாலைக்கும் அஸலாம்.
எம்.எஸ்.: தலைவரே, எப்படி இருக்கீங்க?
பி.எம்: நான் நலம்.
எம்.எஸ்: இப்போதுதான் நான் திரும்பினேன்.
பி.எம்: உனக்கு எனது வாழ்த்துக்கள். நமது ஆட்கள் அங்கு இருந்தனரா?
எம்.எஸ்: ஆமாம், இருந்தனர்.
பி.எம்: யாரெல்லாம் இருந்தனர்?
எம்.எஸ்: சயீத், பிலால், இக்ரமுல்லா.
பி.எம்: மூன்று பேருமே அதைச் செய்தார்களா?
எம்.எஸ்.: இக்ரமுல்லாவும், பிலாலும் செய்தனர்.
பி.எம்: அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
எம்.எஸ்: உங்களை நான் சந்திக்க வேண்டும். எங்கு இருக்கிறீர்கள்?
பி.எம்.: நான் மக்கீனில் (தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கும் பாகிஸ்தானின் பழங்குடியினர் பிராந்தியமான வசிரிஸ்தானில் உள்ளது) இருக்கிறேன். அங்கு அன்வர்ஷா வீட்டுக்கு வந்தால் சந்திக்கலாம்.
எம்.எஸ்: கண்டிப்பாக வருகிறேன்.
பி.எம்: வருவது குறித்து இப்போதைக்கு அன்வர் ஷாவுக்குத் தெரிவிக்க வேண்டாம்.
எம்.எஸ்: சரி.
பி.எம்: நீங்கள் செய்தது மிகப் பெரிய காரியம். உண்மையிலேயே இக்ரமுல்லாவும், பிலாலும் தீரர்கள்.
எம்.எஸ்: மாஷால்லா (கடவுளுக்கு நன்றி). நான் நேரில் வரும்போது முழு விவரத்தையும் தெரிவிக்கிறேன்.
பி.எம்: நான் உனக்காக காத்திருப்பேன். மறுபடியும் உங்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.
எம்.எஸ்: உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பி.எம்: உனக்கு வேறு ஏதாவது தேவையா?
எம்.எஸ்: இல்லை, மிகவும் நன்றி.
பி.எம்: அஸலாமு அலைக்கும்.
எம்.எஸ்.: வாலைக்கும் அஸலாம்.












Click it and Unblock the Notifications