பெனாசிருக்கு ராசியில்லாத 9!
இஸ்லாமாபாத்: உலக அளவில் புதிரான எண்ணாக கருதப்படும் 9, பெனாசிர் பூட்டோவுக்கும் ராசியில்லாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.
பெனாசிரின் வாழ்க்கையில் 9ம் எண்ணுக்குப் பெரும் பங்கு உள்ளது. பெனாசிர் பிறந்த ஆண்டு 1953. அதன் கூட்டுத் தொகை 9. 2007ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார். அந்த எண்ணின் கூட்டுத் தொகையும் 9.
ஆசிப் அலி சர்தாரியை டிசம்பர் 18ம் தேதிதான் கல்யாணம் செய்து கொண்டார் பெனாசிர். அதன் கூட்டுத் தொகையும் 9. கல்யாணத்திற்குப் பிறகுதான் பெனாசிரின் அரசியல் வாழ்க்கையில் பெரும் சறுக்கல் ஏற்பட்டதாக பாகிஸ்தானியர்கள் கருதுகிறார்கள்.
1998ம் ஆண்டு அவராகவே பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய் சென்றார். அதன் கூட்டுத் தொகையும் 9தான்.
ஸ்வீடன் நாட்டு நிறுவனத்திடமிருந்து பெனாசிரும், அவரது கணவரும் 1.5 பில்லியன் டாலர் பணத்தைப் பெற்றதாக ஊழல் வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 1.5 பில்லியன் டாலர் என்பது ரூ. 90 பில்லியன் ஆகும்.
பூட்டோ வாழ்ந்த காலம் 54 ஆண்டுகள். அதன் கூட்டுத் தொகையும் 9. அவர் கொல்லப்பட்ட நாள் டிசம்பர் 27. அதன் கூட்டுத் தொகையும் 9.
இப்படி பூட்டோவின் வாழ்க்கையில் 9ம் எண்ணுக்கு உள்ள தொடர்பு குறித்து பாகிஸ்தானில் சூடான இ மெயில் தகவல் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications