10 ஆண்டுகளில் 40,000 விவசாயிகள் தற்கொலை!
புவனேஸ்வர்: 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய சமூக கண்காணிப்பு கூட்டணி என்கிற கூட்டமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பல்வேறு சமூக நல அமைப்புகள், குடிமக்கள் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டமைப்புதான் தேசிய சமூக கண்காணிப்பு கூட்டணி. நாடாளுமன்றம், நீதித்துறை, காவல்துறை, மத்திய, மாநில அரசுத்துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இந்த அமைப்பு அவ்வப்போது அறிக்கை வெளியிடும்.
தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல விவசாயத்துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியும் கூட படு மோசமாக உள்ளது.
40 சதவீத விவசாயக் குடும்பங்களில், விவசாயம் முதன்மையான தொழிலாக இல்லை. நஷ்டத்தைக் கொடுப்பதாக உள்ளதால் விவசாயத்தை முதன்மையான தொழிலாக அவர்கள் செய்ய முடியவில்லையாம்.
2004ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த நாடாளுமன்றத் தொடரின்போது உறுப்பினர்கள் மேற்கொண்ட வெளிநடப்புகள், கூச்சல் குழப்பங்கள், ஒத்திவைப்புகளால் நாடாளுமன்றத்தின் 26 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்துக்களுக்கும், நகராட்சிகளுக்கும் முழுமையான அளவில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாநில அரசுகள் சுத்தமாக மதிக்காமல் நடந்து கொள்கின்றன. மாநில அரசுகள் வசம்தான் இன்னும் கூட பஞ்சாயத்துக்கள், நகராட்சிகளின் நேரடி நிர்வாகம் உள்ளது. இவற்றுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.
ஜவஹர்லால் நேரு நகர்ப்பு புணரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 4,430.23 கோடியை ஒதுக்கியது. இதில் நகர்ப்புற மக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக ரூ. 1003.27 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் பெருமளவில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் 33 ஆயிரத்து 635 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநில உயர்நீதிமன்றங்களில் 34 லட்சத்து 24 ஆயிரத்து 518 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் நாடு முழுவதும் உள்ள பிற நீதிமன்றங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 135 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளனவாம்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications