10 ஆண்டுகளில் 40,000 விவசாயிகள் தற்கொலை!
புவனேஸ்வர்: 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய சமூக கண்காணிப்பு கூட்டணி என்கிற கூட்டமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பல்வேறு சமூக நல அமைப்புகள், குடிமக்கள் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டமைப்புதான் தேசிய சமூக கண்காணிப்பு கூட்டணி. நாடாளுமன்றம், நீதித்துறை, காவல்துறை, மத்திய, மாநில அரசுத்துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இந்த அமைப்பு அவ்வப்போது அறிக்கை வெளியிடும்.
தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல விவசாயத்துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியும் கூட படு மோசமாக உள்ளது.
40 சதவீத விவசாயக் குடும்பங்களில், விவசாயம் முதன்மையான தொழிலாக இல்லை. நஷ்டத்தைக் கொடுப்பதாக உள்ளதால் விவசாயத்தை முதன்மையான தொழிலாக அவர்கள் செய்ய முடியவில்லையாம்.
2004ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த நாடாளுமன்றத் தொடரின்போது உறுப்பினர்கள் மேற்கொண்ட வெளிநடப்புகள், கூச்சல் குழப்பங்கள், ஒத்திவைப்புகளால் நாடாளுமன்றத்தின் 26 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்துக்களுக்கும், நகராட்சிகளுக்கும் முழுமையான அளவில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாநில அரசுகள் சுத்தமாக மதிக்காமல் நடந்து கொள்கின்றன. மாநில அரசுகள் வசம்தான் இன்னும் கூட பஞ்சாயத்துக்கள், நகராட்சிகளின் நேரடி நிர்வாகம் உள்ளது. இவற்றுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.
ஜவஹர்லால் நேரு நகர்ப்பு புணரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 4,430.23 கோடியை ஒதுக்கியது. இதில் நகர்ப்புற மக்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக ரூ. 1003.27 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் பெருமளவில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் 33 ஆயிரத்து 635 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநில உயர்நீதிமன்றங்களில் 34 லட்சத்து 24 ஆயிரத்து 518 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் நாடு முழுவதும் உள்ள பிற நீதிமன்றங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 135 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளனவாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications