சுப.இளவரசனின் தமிழர் நீதிக் கட்சி
சென்னை: தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த சுப.இளவரசன் தமிழர் நீதிக்கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
அவர் கூறுகையில்,
எங்களது தமிழர் விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் எங்கள் கட்சி, இயக்கம் மீது தடை பெற்றனர். இது பற்றிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தற்போது தமிழர் நீதிக்கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளேன்.
தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கட்சிக்கு சென்னை, கோவை, திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மக்கள் வன்முறையை விரும்பவில்லை. மக்கள் உணர்வுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதால் நாங்கள் ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ளோம். என் மீது 21 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இவற்றில் 16 வழக்குகளில் விடுதலை கிடைத்துள்ளது என்றார்.