பிரதமரின் இலங்கை பயணம்-எதிராக வீரமணி, திருமா போராட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வீரமணியும், திருமாவளவனும் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கையின் சுதந்திர தின விழா ஜனவரி 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது. இதையறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
தமிழர்களுக்கு எதிராக இனப் போரை ஏவி விட்டுள்ள இலங்கை அரசு நடத்தும் விழாவில் நமது பிரதமர் பங்கேற்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பிரதமர் மட்டுமல்ல, இந்தியாவின் சார்பில் யாரும் இலங்கை சுதந்திர தினத்தில் பங்கேற்கக் கூடாது.
இலங்கையில் தமிழர்கள் 2ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பிரதமர் பங்கேற்றால் அது இலங்கை அரசை ஊக்குவித்தது போலாகிவிடும். பிரதமர் இலங்கை செல்வதை தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு தடுக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திக தொண்டர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications