For Daily Alerts
Just In
ஓடும் பஸ்சில் முதியவர் மாரடைப்பால் மரணம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டதால் முதியவர் இறந்தார்.
திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பஸ் ஓன்று மதியம் ஆறுமுகநேரி அருகே வந்தபோது பஸ்சிலிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் துடித்தார். பேசக் கூட முடியாமல் திணறினார். இதையடுத்து பஸ்சின் நடத்துனரும், ஓட்டுநரும், அதே பஸ்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Comments
Story first published: Wednesday, January 2, 2008, 12:53 [IST]