விலையைக் குறைக்காவிட்டால்... சிமென்ட் நிறுவனங்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனங்கள் தாங்களாகவே விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நலன் கருதி அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சிமென்ட் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளற், தமிழக அரசின் சிமென்ட் நிறுவன தலைவர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய அரசிடமிருந்து உடனடியாக 1 லட்சம் டன் சிமென்ட்டை இறக்குமதி செய்து அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து நுகர்வோர்களுக்கு எந்தவித லாபமும் இல்லாமல், அடக்க விலையில் விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைளை உடனடியாக எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனங்கள் உடனடியாக தாங்களாகவே விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவற்றின் தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்க அரசு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிமென்ட் விலையைக் குறைக்க வேண்டும், சிமென்ட்டை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். வருகிற 7ம் தேதி இதுதொடர்பாக போராட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி சிமென்ட் விற்பனையை நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடியாக விற்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications