விலையைக் குறைக்காவிட்டால்... சிமென்ட் நிறுவனங்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனங்கள் தாங்களாகவே விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நலன் கருதி அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சிமென்ட் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளற், தமிழக அரசின் சிமென்ட் நிறுவன தலைவர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய அரசிடமிருந்து உடனடியாக 1 லட்சம் டன் சிமென்ட்டை இறக்குமதி செய்து அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து நுகர்வோர்களுக்கு எந்தவித லாபமும் இல்லாமல், அடக்க விலையில் விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைளை உடனடியாக எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனங்கள் உடனடியாக தாங்களாகவே விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவற்றின் தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்க அரசு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிமென்ட் விலையைக் குறைக்க வேண்டும், சிமென்ட்டை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். வருகிற 7ம் தேதி இதுதொடர்பாக போராட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி சிமென்ட் விற்பனையை நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடியாக விற்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications