அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலக இலங்கை அரசு முடிவு
கொழும்பு: நார்வே தூதுக் குழுவின் முயற்சியால் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திலிருந்து முறைப்படி விலகிக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இலங்கையில் போர் உக்கிரமடையும் ஆபத்து எழுந்துள்ளது.
நார்வே தூதுக்குழுவின் முயற்சியால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்டது.
ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் சீக்கிரமே மீறப்பட்டு விட்டது. இரு தரப்பும் சிறு சிறு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபடத் தொடங்கி இன்று பெரிய போராக மாறியுள்ளது.
இரு தரப்பிலும் கடுமையாக சண்டை நடந்து வருகிறது. தினசரி சராசரியாக 20-30 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் இரு தரப்புமே இதுவரை அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை. போர் நிறுத்த ஒப்பந்த விதிப்படி, இரு தரப்பிலும் யாரேனும், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக இருந்தால் 14 நாட்களுக்கு முன்பு நார்வே அரசுக்கு நோட்டீஸ் தந்து விலகிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை இரு தரப்புமே போர் நிறுத்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து முறைப்படி விலகிக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெஹலியா ரம்புகெவல்லா கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான நோட்டீஸ் வழங்கப்படும்.
இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இப்போதைக்கு தடை விதிப்பதில்லை என்று அரசுத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் இனிமேல் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. இதை ஒரு கொள்கை முடிவாக எடுத்துள்ளோம். நார்வே முயற்சியில் 2002ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் தோல்வி அடைந்து விட்டது என்றார் அவர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறைப்படி முறித்துக் கொள்ள இலங்கை அரசு தயாராகி விட்டதால், இலங்கையில் போர் மேலும் உக்கிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications