For Daily Alerts
Just In
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது அவதூறு வழக்கு
பெங்களூர்: வீர சைவ பிரிவினர் குறித்து முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் முதன்மை பெருநகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் அம்ருதேஷ் என்ற வக்கீல் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், மதச்சார்பற்ற ஜனதாதள செயற்குழு கூட்டத்தின் போது வீரசைவ மடாதிபதிகளை அவமதிக்கும் வகையில் குமாரசாமி கருத்து தெரிவித்திருந்தார்.
எனவே அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.
Comments
Story first published: Friday, January 4, 2008, 18:25 [IST]