'மாஜி' அதிமுக எம்எல்ஏ மீதான தாக்குதல்-'க்ளூ' கிடைக்காமல் திணறும் போலீஸ்
அம்பாசமுத்திரம்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகனை தாக்கியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏவான சக்திவேல் முருகன் கடந்த 29ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்த நிலையில் அவரை தாக்கிய கும்பலை பற்றிய அடையாளம் குறித்து தாக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ மற்றும் அவரது கார் டிரைவர் ஜெயமுருகன் ஆகியோருக்கு தெரியவில்லை.
குற்றவாளிகளை பற்றி எந்தவொரு அடையாளமும் தெரியாத நிலையில் போலீசார் எந்த கோணத்திலும் விசாரணை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இதற்கு முன் நடந்த அதிமுக கூட்டத்தின்போது சக்திவேல் முருகனை அவரது கட்சியினர் சிலரே தாக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்த விவகாரம் உட்கட்சி பூசலாக இருக்கும் என சந்தேகித்து அந்தக் கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.