மலேசிய அரசு மீது 'ஹிண்ட்ராப்' ஆலோசகர் உதயக்குமார் அவதூறு வழக்கு

மலேசியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி உதயக்குமார் உள்ளிட்ட ஐந்து தமிழர்கள் மீது மலேசிய அரசு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அவருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக மலேசிய காவல்துறை, நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், மலேசிய அரசு மீதும், காவல்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் மீது உதயக்குமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான மனுவை இன்று (ஜனவரி 4) அவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உதயக்குமார் சார்பில் அவரது வழக்கறிஞர் மனோகரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். மனுவில் மலேசிய அரசு, காவல்துறை தலைவர் மூசா ஹசன், தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டாயில் ஆகியோரது பெயர்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில், எனக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவதூறான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அரசிடம் என்ன ஆதாரம் உள்ளதை என்பது விளக்க வேண்டும்.
அவதூறான புகாரைக் கூறி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியற்காக 43 மில்லியன் சிங்கப்பூர் டாலர் இழப்பீட்டைத் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் உதயக்குமார்.
இந்தியர்கள் வழக்கு ஒரே வழக்காக மாற்றம்:
இதற்கிடையே, மலேசிய காவல்துறை 54 இந்தியர்கள் மீது தனித் தனியாக தொடர்ந்துள்ள வழக்கை ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் தங்களுடைய சிவில் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஹின்ட்ராப் அமைப்பின் சார்பில் தமிழர்கள் கடந்த ஆண்டு அமைதியான முறையில் பேரணி நடத்தினர்.
ஆனால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 54 தமிழர்கள் மீது சட்ட விரோதமாக கூடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் 37 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மற்றவர்கள் வழக்கு வேறு நாளில் நடைபெறுவதாக நினைத்து கோர்ட்டில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த 54 பேர் மீதான வழக்கையும் ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications