மங்களூரில் 2 இலங்கைத் தமிழர்கள் கைது - ரூ. 3 லட்சம் நகைகள் பறிமுதல்
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்திய போலீஸார் அங்கு தங்கியிருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யபப்பட்டன.
மங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இலங்கைத் தமிழர்கள் இருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அந்த ஹோட்டலை போலீஸார் சோதனையிட்டு அங்கு தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த பால ரூபன் என்கிற ரூபன் என்கிற கதிர்வேலு குணசெல்வனையும், ஜெயசீலன் என்கிற சீலனையும் கைது செய்தனர்.
இருவரும் பெங்களூரில் தங்கியுள்ளனர். மங்களூர் வந்து ஹோட்டலில் தங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்கினர்.
இருவரிடமிருந்தும் குணசெல்வன் என்கிற பெயரில் இருந்த இரண்டு போலி பாஸ்போர்டுட்கள், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தங்களிடம் போலியான கிரெடிட் கார்டுகளைக் கொடுத்ததாகவும், அதை வைத்து நகைகள் வாங்கியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்னர்.
இந்த நகைகளை மங்களூர் மற்றும் கர்கலாவில் உள்ள கடைகளில் வாங்கியதாகவும், இதற்காக தங்களுக்கு கமிஷன் தருவதாக அந்த இலங்கைத் தமிழர் உறுதியளித்திருந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.
இந்த போலி கிரெட்டி கார்டுகள் சென்னையில் தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவருக்கும் சர்வதேச அளவிலான போலி கிரெடிட் கார்டு கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக இந்த நகைகள் வாங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போனில், பல வெளிநாட்டினின் எண்களும் உள்ளன.
இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications