தேசியக் கொடியை அவமதித்த வழக்கு - சானியாவுக்கு நோட்டீஸ்
போபாலைச் சேர்ந்த பிரஷாந்த் குமார் தாக்கூர் என்பவர் போபால் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், சானியா மிர்ஸா தேசியக் கொடிக்கு முன்பு தனது காலை காட்டுவது போல செய்தித் தாள்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் அவர் தேசியக் கொடியை அவமதித்துள்ளார். எனவே அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கண்டிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், இதுபோல தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடக்காமல் இருக்க தேவையான உத்தரவை பிறப்பிக்குமாறு அய்யருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த போபால் தலைமை நீதித்துறை நடுவர் ஸ்ரீவத்சவா, சானியா மிர்ஸா இதற்கு மார்ச் 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதேசமயம், இந்த வழக்கில் அமைச்சர் மணிசங்கர அய்யரை ஒரு பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.
ஹோபர்ட் போட்டியல் சானியா தோல்வி
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் சானியா மிர்ஸா தோல்வி அடைந்தார்.
இத்தாலி வீராங்கனை பிளேவியா பென்னட்டாவுடன் அவர் மோதினார். இப்போட்டியில், 5-7, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் சானியா தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் ஹோபர்ட் போட்டியிலிருந்தும் அவர் வெளியேறினார்.













Click it and Unblock the Notifications