For Quick Alerts
For Daily Alerts
Just In
சவூதியில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இந்திய சிறுமி பலி
துபாய்: சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் 14 வயதுள்ள சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி ஆந்திராவை சேர்ந்த சிறுமி உயிரிழந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் அன்சாரி. இவர் தனது மனைவி, மகள் லமியா பாத்திமா (6) ஆகியோருடன் ரியாத்தில் தங்கியுள்ளார். அன்சாரியின் மனைவி யமமா மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று குப்பை போடுவதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்தார் பாத்திமா. அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ரியாத் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த காரை ஓட்டி வந்தவர் 14 வயதே ஆன சவூதியைச் சேர்ந்த சிறுவன் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
Comments
Story first published: Thursday, January 10, 2008, 16:49 [IST]