For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவையில் கடும் பனிமூட்டம்: சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
கோவை: கோவையில் விமான நிலைய ஓடு பாதை தெரியாத அளவு கடும் பனி மூட்டம் இருந்ததால் விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது.
கோவையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்ப இருந்த ஏர் டெக்கான் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2 மணி நேரம் தாமதத்துக்குப் பின் அந்த விமானம் கோவைக்கு கிளம்பிச் சென்றது. இதனால் அதில் பயணம் செய்த 87 பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அதே போல் மும்பையில் இருந்து கோவைக்கு வந்த விமானம் அங்கு கடும் பனி மூட்டம் நிலவியதால் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. 120 பயணிகளுடன் அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது.
பின்னர் 2 மணி நேர தாமதத்துக்குப் பின் கோவைக்கு கிளம்பிச் சென்றது.
இது தவிர சில விமானங்களும் பனி மூட்டத்தால் தாமதமாயின
Comments
Story first published: Saturday, January 12, 2008, 17:01 [IST]