நீதிமன்றத்தில் ஆஜாரான திருடு போன பசு மாடுகள்
சாத்தான்குளம்: திருடு போன பசு மாடுகள் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தைலாபுரம் சேக்ரட் தொண்டு நிறுவனத்தில் ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஸ்பஸ்சன் என்பவர் இவற்றை கவனித்து வருகிறார். தொண்டு நிறுவனத்தில் கட்டப்பட்டிருந்த 2 பசு மாடுகள் கடந்த 5ம் தேதியன்று காணாமல் போயின. இதுகுறித்து ஸ்பஸ்சன் போலீசில் புகார் செய்தார்.
இதன்படி மெய்ஞானபுரம் எஸ்.ஐ. முத்தையா விசாரணை நடத்தி, பசுமாடுகளை திருடிய எழுவரைமுக்கியை சேர்ந்த சாம், தூத்துக்குடியை சேர்நத் மாரிமுத்து ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாடுகள் மேலப்பாளையத்தில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் திருடுபோன பசுமாடுகளை மீட்ட போலீசார் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய், வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் இரு மாடுகளையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications