தடுப்புச் சுவர் உடைந்தது - ஆபத்தில் அமராவதி பாலம்

Subscribe to Oneindia Tamil


கரூர்: கரூர் அருகே உள்ள ராஜபுரம் அமராவதி பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்தது. இதனால் பாலம் உடையுமோ என்ற பீதி மக்களிடையே எழுந்துள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் ராஜபுரம் அருகே அமராவதி பாலம் உள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மற்றும் கோவை பகுதிகளுக்கு இந்த பாலம் வழியாகத் தான் சரக்கு வாகனங்கள், மற்றும் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.

தினசரி இந்த பாலத்தின் வழியாக 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. தற்போது இந்த பாலத்தின் கிழக்கு பகுதியில் சுமார் 15 அடி நீலத்திற்கு தடுப்பு சுவர் உடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது.

இதன் வழியாக பள்ளி, கல்லூரிக்கு தினசரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அதே போன்று சிறு வயது குழந்தைகளும் தொடக்கப் பள்ளிக்கு இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டி நிலையுள்ளது.

ஆகவே பெரியளவில் விபத்து ஏற்படும் முன்பு தடுப்பு சுவர் உடைந்து அபாயகரமாக காட்சி தரும் ராஜபுரம் பாலத்தை தமிழக அரசு உடனே சீர் செய்தால் எதிர் காலத்தில் பல உயிர்கள் பலியாவதை தடுக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+