பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த கறிக் கடைக்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
திருவேங்கடம் அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் முத்துசாமி. பண்டிகை காலங்களில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
குலசேகரன்கோட்டையை சேர்ந்த தங்கராஜ் மனைவி வள்ளியம்மாள். இவர் இளையரசனேந்தலுக்கு பஸ்சில் வந்தார். பஸ் நிறுத்தில் இறங்கி நடந்து சென்ற வள்ளியம்மாளை பின்தொடர்ந்து முத்துசாமி வந்தார். திடீரென அவரது கையை பிடித்து இழுத்ததோடு ஆபாசமாகவும் பேசினார். அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் கூச்சலிடவே முத்துசாமி தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து வள்ளியம்மாள் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் முத்துசாமியை கைது செய்து சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.












Click it and Unblock the Notifications