சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி சங்கரபேரி ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவர் தூத்துக்குடி காவல்துறையின் வயர்லெஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இவரது மனைவி கார்த்தீஸ்வரி. கடந்த 10ம் தேதி மாரியப்பன் குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
நேற்று காலையில் மாரியப்பன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
துணை எஸ்பி முகமது கவுஸ்கான் கோரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications