நெல்லையில் நாளை ஐடி திருவிழா
நெல்லை: நெல்லையில் எல்காட் நிறுவனம் நடத்தும் ஐ.டி மாணவர்கள்-ஐ.டி நிறுவனங்களின் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (18ம் தேதி) நடக்கிறது. 67 கல்லூரிகளை சேர்ந்த 8,370 மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 500 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இங்கு தங்களது அலுவலகங்களை அமைக்க சுதர்லெண்ட், ஹெக்ஸாவேர் ஆகிய 2 நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையை போன்று தகவல் தொழில் நுட்ப பூங்கக்கள் இரண்டாம் நிலை நகரமான நெல்லையிலும் அமைவதற்கான சத்தியகூறுகள் உள்ளன, ஆங்கிலம் பேசும் ஆற்றல் படைத்த மாணவர்கள் நெல்லையிலும் உள்ளனர் என்பதை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எடுத்துரைக்க பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் உமாசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் பின்னணியில், நாளை பாளை தூய சவேரியர் கல்லூரியிலும், 19ம் தேதி சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியிலும் ஐடி விழா நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லை மாவட்டத்தில் உள்ள 25 கல்லூரிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 413 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 9 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்து 810 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 கல்லூரிகளை சேர்ந்த 648 பேரும் விருதுநகர் மாவட்டத்தில் 16 கல்லூரிகளைச் சேர்ந்த 1,499 பேரும் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 67 கல்லூரிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 370 பேர் பதிவு செய்துள்ளதாக எல்காட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தங்கும் வசதிகள் அனைத்தும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூய சவேரியர் கல்லூரியில் கலைநிழ்ச்சிகள் நடத்த திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த ஏற்பாடுகளை எல்காட் நிர்வாக இயக்குனர் உமாசங்கர், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications