For Quick Alerts
For Daily Alerts
Just In
திருப்பூர் மேயருக்கு லண்டனிலிருந்து மிரட்டல்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜுக்கு லண்டனிலிருந்து தொலைபேசி மூலம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மேயர் செல்வராஜுக்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
தொலைபேசி அழைப்பு லண்டனிலிருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அந்த நபர் இலங்கைத் தமிழில் பேசியதாக செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
எனவே மேயரை மிரட்டியது விடுதலைப் புலிகள் அல்லது வேறு போராளிக் குழுக்களைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை மிரட்டலைத் தொடர்ந்து செல்வராஜின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Friday, January 18, 2008, 17:22 [IST]