திருச்செங்கோடு-திட்டிய பெண்ணை சுட்ட மாணவன்
திருச்செங்கோடு: தன்னை திட்டிய பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு, பழைய பேருந்து நிலையம் அருகே லோகநாயகி (53) என்பவர் விளையாட்டுப் பொருட்கள்(ஸ்போர்ட்ஸ் ஷாப்) விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
ஒரு வாரத்துக்கு முன் இந்தக் கடைக்கு மோடமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரஞ்சித் (16) நேற்று கிரிக்கெட் பேட் வாங்க வந்துள்ளார். கடையில் ரொம்ப நேரம் செலவழித்துவிட்டு நாளை வந்து கிரிக்கெட் பேட் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தனது நேரத்தை வீணாக்கியதால் எரிச்சலான லோகநாயகி, ரஞ்சித்தை திட்டி அனுப்பினார்.
இதனைல் ஆத்திரமடைந்த ரஞ்சித் நேற்று தனது தாத்தாவின் ரிவால்வாரை எடுத்து வந்து லோகநாயகியை சுட்டார்.
இதில் லோகநாயகியின் முதுகில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்தார். சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற ரஞ்சித்தை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்து லோகநாயகி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சித் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் பயன்படுத்திய துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை.












Click it and Unblock the Notifications