ஒரிசாவில் பஸ் எரிந்து 5 பயணிகள் பலி - 25 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில், பூரியிலிருந்து பக்தர்களுடன் வந்த மத்திய பிரதேச மாநில அரசுப் பேருந்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் 5 பேர் உயிருடன் கருகி இறந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
கல்பனா சதுக்கம் என்ற இடத்தில் இன்று காலை இந்த பயங்கர விபத்து நடந்தது.
பேருந்தில் தற்செயலாக தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது. இதில் 5 பயணிகள் தப்பிக்க வழியில்லாமல் தீயில் சிக்கி கருகினர். 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் இருந்த பயணிகள் உல்லன் துணிகளையும், மண்ணெண்ணை அடுப்புகளையும் வைத்திருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே தீ வேகமாக பரவி 5 பேர் பலியாக முக்கிய காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.












Click it and Unblock the Notifications