ரேஷன் கடைகளில் சிமென்ட் விற்பனை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil


சென்னை: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு சிமென்ட் விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

சிமென்ட் பற்றாக்குறை மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்போர், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதையடுத்து குறைந்த விலையில் ( மூடை ஒன்று ரூ.200க்கு) நியாய விலைக் கடைகள் மூலம் சிமென்ட் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

அந்தத் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் இந்த ரேஷன் சிமென்ட் நியாய விலைக் கடைகள் மூலம் விற்கப்படும்.

அதன்படி 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டுவோருக்கு அதிகபட்சம் 100 மூடைகள், மூடை ஒன்றுக்கு ரூ. 200 என்ற கணக்கில் வழங்கப்படும்.

இந்த சிமென்ட்டைப் பெற தாசில்தாரிடம் போய் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும். அனுமதி கடிதத்ைதப் பெற வீட்டுக்கான கட்டட வரைபட நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனுமதி பெற்ற கட்ட வரைபடம் இல்லாதவர்களுக்கும் சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+