ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்: மு.மேத்தா, அறிவுமதி பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவ நடவடிக்கையை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ராணுவ உதவிகளை வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, மதுரை, கோவை, திருவாரூரில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
இதில் கவிஞர்கள் அறிவுமதி, மு.மேத்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல கோவை, மதுரை, திருவாரூர் ஆகிய ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications