மதுரையில் ஜாதி சான்றிதழ் கேட்டு நரி, கீரி, பாம்புகளுடன் போராட்டம்
மதுரை: ஜாதி சான்றிதழ் கேட்டு கீரி, நரி, பாம்புகளுடன் காட்டு நாயக்கர் சமூகத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை சுற்றிலும் காட்டு நாயக்கர் சமூகத்தினரும், ஆதிவாசிகளும் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்
ஆனால் அவர்கள் கோரிக்கையை இதுநாள் வரை எந்த அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை.
ஜாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாமல் இருப்பதாக தெரிவித்து இன்று தங்கள் குழந்தைகளுடன் அந்த சமூகத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டம நடத்த வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் சின்னராகவன் தலைமை தாங்கினார்.
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஆதிவாசிகள் தங்களுடன் கீரி, நரி, பாம்புகளையும் கொண்டு வந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பாம்பு படமெடுத்து ஆடியதால் அங்கிருந்தவர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடினர்.
இவர்களது வினோத போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications