பங்கு சந்தையில் இன்றும் பெரும் சரிவு
டெல்லி: இந்திய பங்குச் சந்தையில் நேற்று ஆரம்பித்த மிகப் பெரிய சரிவு இன்றும் தொடர்ந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 10 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டதையடுத்து வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இது மூன்றாவது முறையாகும். நேற்றைய சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று பிஎஸ்ஈயின் சென்செக்ஸ் (SENSEX) குறியீட்டு எண் 1,716.41 புள்ளிகள் சரிந்த நிலையில் தான் வர்த்தகம் துவங்கியது. பின்னர் மேலும் புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 15,888.94 என்ற நிலையை அடைந்தது.
பின்னர் நிலைமை கொஞ்சம் சரியாகி 16,729 புள்ளிகளை தொட்டது. மொத்தத்தில் இன்றும்
875 புள்ளிகள் அளவுக்கு மும்பை சந்தையில் சரிவு ஏற்பட்டது.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலும் 5.94 சதவீத அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்த பங்கு விலைகளின் சரிவால் இன்போசிஸ், ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் பெட்ரோகெமிக்கல், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகியவை கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்துள்ளன.