பரபரப்பான சூழலில் நாளை கூடும் தமிழக சட்டசபை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையில் தமிழக சட்டப்பேரவையின் 2008ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
அதிமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விடுதலைப் புலிகள் ஊடுருவல், சேது சமுத்திரத் திட்டம், சிமென்ட் விலை உயர்வு, வெள்ள நிவாரணப் பணிகள், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பவுள்ளன.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கை கையில் எடுத்து பாமகவும் இடதுசாரிகளும் அரசை ஒரு கை பார்க்கவுள்ளன.
ஜெயலலிதாவை எதிர்கொள்ள எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றது, குஜராத் முதல்வர் மோடிக்கு விருந்தளித்தது ஆகிய விவகாரங்களை திமுக பயன்படுத்தவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடர் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications