அமைதிப் பாதைக்கு திரும்ப பின் லேடனுக்கு மகன் கோரிக்கை
கெய்ரோ: தீவிரவாதப் பாதையிலிருந்து விலகி அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு தனது தந்தை பின் லேடனுக்கு அவரது மகன் ஒமர் பின் லேடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகை உலுக்கி வரும் அல் கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடன் என்ன ஆனார், எங்கு இருக்கிறார், இருக்கிறாரா, இல்லையா என்பது பெரும் குழப்பமாக இருந்து வரும் நிலையில், தீவிரவாதத்தை விட்டு விடுமாறு அவருக்கு அவரது மகன் ஒமர் பின்லேடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வன்முறைகளுக்கு முடிவு வர வேண்டும். இதனால்தான் நான் பகிரங்கமாக எனது தந்தைக்கு இந்தக் கோரிக்கையை விடுக்கிறேன்.
எனது தந்தையாலும், அவரைப் பின்பற்றி வருபவர்களாலும் எண்ணற்ற அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. உலகம் முழுவதும் தீவிரவாதத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காத அளவுக்கு உள்ளது.
எனது தந்தைக்கு நான் கூறிக் கொள்வதெல்லாம், உங்களது இலக்கை அடைய தீவிரவாதப் பாதையை விட்டு விட்டு வேறு பாதையைத் தேர்வு செய்யுங்கள். குண்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றை விட்டு விடுங்கள். அவை யாருக்கும் நன்மை பயப்பதில்லை. அமைதிப் பாதையை தேர்வு செய்யுங்கள்.
இந்தக் கோரிக்கையை நானாக விடுக்கவில்லை. என்னைப் போல அமைதியை விரும்பும் எண்ணற்ற இஸ்லாமியர்களின் விருப்பமும் இதுதான். நீங்கள் பாதை மாற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லீம்கள் விரும்புகிறார்கள்.
2000மாவது ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா பயிற்சி முகாமிலிருந்து நான் வெளியேறினேன். எனது தந்தை என்னை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அதன் பின்னர் எனது தந்தையுடன் நான் பேசவில்லை.
அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. ஆனால் அவரை எளிதில் யாராலும் பிடிக்க முடியாது என்று மட்டும் நம்புகிறேன். காரணம், உள்ளூர் மக்களின் பெரும் ஆதரவுடன் அவர் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்றார் ஒமர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான பெலிக்ஸ் என்ற பெண்மணியை மணந்து கொண்ட ஒமர் (அவருக்கு வயது 26தான் என்பது குறிப்பிடத்தக்கது) தற்போது கெய்ரோவில் வசித்து வருகிறார்.
அவர் மூலம் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது ஒமரும், அவரது மனைவியும் சேர்ந்து அமைதிக்கான இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?













Click it and Unblock the Notifications