நெஞ்சு வலி- ஆயுள் தண்டனை கைதி மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சிறையில் நெஞ்சு வலியால் துடித்த ஆயுள் தண்டனைக் கைதி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், கெருங்கால்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (26). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்த அப்பாஸ் நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை சிறை அதிகாரிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் இறந்தார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications