சொன்னதையே சொல்லியிருக்கிறார்கள்-ஆளுநர் உரை குறித்து விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட பல அறிவிப்புகளைத் தான் கவர்னர் உரையாக்கி இருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த்,
தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட பல அறிவிப்புகளின் அறிக்கைகளைத் தொகுத்து, அதை ஒரு புத்தகமாக தயாரித்துள்ளனர். அதைத் தான் கவர்னர் உரை ஆக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் 3 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை என்று தானே அர்த்தம்.
வறுமையை 22 சதவீதம் ஒழித்து விட்டதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஊழலை ஒழிப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் இது அரசின் அறிக்கைகளின் தொகுப்பு. அவ்வளவு தான். தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவதை ஒழிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications