முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்: ஜெ. தாக்கு
சென்னை: தமிழகத்தில் தற்போது அமைதி நிலவுகிறது என்று ஆளுநர் உரை நிகழ்த்தியது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கவர்னர் உரை என்பது தொலைநோக்குப் பார்வை, கனவு, கனவை நினைவாக்கும் திட்டமாக இருக்க வேண்டும்.
ஆனால், இந்த கவர்னர் உரையின் பலன் பூஜ்யம் தான். தமிழகத்தில் அமைதி நிலவுகிறது என்று கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
நதி நீர்ப் பிரச்னையில் எந்தவொரு இறுதி முடிவும் இல்லாத நிலையில் அதிகாரம் பெற்ற அமைப்புகளின் முடிவுகளை மதித்து அனைத்து மாநிலங்களும் நடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது கண்துடைப்பு, மோசடி நாடகம்.
இதற்கும் பணம் இருக்கிறது, அதற்கும் பணம் இருக்கிறது என்று கருணாநிதி பேசினார். ஆனால், கவர்னர் உரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக சீரமைக்க தமிழக அரசிற்குத் தேவைப்படும் நிதியுதவியை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை.
அரசின் சாதனை என்பது திட்டப் பணிகளை நிறைவேற்றுவது தானே தவிர, வெறுமனே ஒப்புதல் அளிப்பது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்று 20 மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன. விலைவாசி உயர்வு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகளே போராட்டம் நடத்தின.
கவர்னர் உரையில் தமிழகத்தில் விலை வாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அரசின் சாதனையாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்புகள் கேலிக்கூத்தானவை, நகைப்புக்குரியவை, எள்ளி நகையாடத்தக்கவை என்று ஜெயலலிதா தாக்கியுள்ளார்.
-
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications