முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்: ஜெ. தாக்கு
சென்னை: தமிழகத்தில் தற்போது அமைதி நிலவுகிறது என்று ஆளுநர் உரை நிகழ்த்தியது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கவர்னர் உரை என்பது தொலைநோக்குப் பார்வை, கனவு, கனவை நினைவாக்கும் திட்டமாக இருக்க வேண்டும்.
ஆனால், இந்த கவர்னர் உரையின் பலன் பூஜ்யம் தான். தமிழகத்தில் அமைதி நிலவுகிறது என்று கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
நதி நீர்ப் பிரச்னையில் எந்தவொரு இறுதி முடிவும் இல்லாத நிலையில் அதிகாரம் பெற்ற அமைப்புகளின் முடிவுகளை மதித்து அனைத்து மாநிலங்களும் நடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது கண்துடைப்பு, மோசடி நாடகம்.
இதற்கும் பணம் இருக்கிறது, அதற்கும் பணம் இருக்கிறது என்று கருணாநிதி பேசினார். ஆனால், கவர்னர் உரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக சீரமைக்க தமிழக அரசிற்குத் தேவைப்படும் நிதியுதவியை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை.
அரசின் சாதனை என்பது திட்டப் பணிகளை நிறைவேற்றுவது தானே தவிர, வெறுமனே ஒப்புதல் அளிப்பது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்று 20 மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன. விலைவாசி உயர்வு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகளே போராட்டம் நடத்தின.
கவர்னர் உரையில் தமிழகத்தில் விலை வாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அரசின் சாதனையாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்புகள் கேலிக்கூத்தானவை, நகைப்புக்குரியவை, எள்ளி நகையாடத்தக்கவை என்று ஜெயலலிதா தாக்கியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications