கடன் தர மறுத்தவருக்கு காதுக் கடி - நண்பருக்கு காலில் கடி
Subscribe to Oneindia Tamil
புளியங்குடி: சிவகிரியில் கடன் கொடுக்க மறுத்த வாலிபரையும், அவரது நண்பரையும் கடித்து குதறிய டெய்லர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி வடக்கு ரத வீதியை சேர்ந்துவர் சந்திரன். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி. தையல் கடை வைத்துள்ளார். இருவரும் நண்பர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு ரவி, சந்திரனிடம் ரூ.10 ஆயிரம் கடன் கேட்டார். ஆனால் தற்போது பணம் இல்லை என சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து சந்திரனிடம் பணம் கேட்டு வந்த ரவி ஆத்திரத்தில் சந்திரனை வழிமறித்து அவரது காதை கடித்து குதறினார். இதை தடுக்க வந்த சந்திரனின் நண்பர் ராம்குமாரையும் காலை பிடித்து கடித்தார். இதில் படுகாயமடைந்த இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ரவியை கைது செய்து சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.












Click it and Unblock the Notifications