தை-தமிழ்ப் புத்தாண்டு: வீரமணி பெரும் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் பெரியார் கொள்கையுடைய ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபையில் ஆளுநர் அறிவிப்பில் அரசின் இரு கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 240 பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் பெரியார் சிலை நிறுவப்படும் என்றும், தை மாதம் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரியார் கொள்கையுடைய ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதால் சமூக சிந்தனையோடு இத்தகைய மதிப்புறு செயல்பாடுகளை காணமுடிகிறது.
பெரியார் உருவத்தை காணும் தோறும் அவர்களின் கொள்கைகளை, சாதனைகளை மக்கள் மத்தியிலே அசைபோட வைக்கும்.
தை மாதம் முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கும் வெற்றி கிடைத்துள்ளது. தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. தமிழர்களின் ஒப்புயர்வற்ற ஆட்சியைத் தமிழர்கள் கண்ணின் இமையாக இருந்து காப்பாற்றுவோம் என்று தமிழர்கள் உறுதி எடுத்துக் கொள்வார்களாக என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கி.வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications