For Quick Alerts
For Daily Alerts
Just In
கே.ஆர்.நாராயணன் மனைவி உஷா மரணம்
டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் மனைவி உஷா நாராயணன் டெல்லியில் நேற்று மரணமடைந்தார்.
நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டிசம்பர் 31ம் தேதி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.30 மணியளவில் மரணமடைந்தார்.
உஷா நாராயணனின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறுகிறது.
உஷா நாராயணனின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Friday, January 25, 2008, 10:37 [IST]