ராமேஸ்வரத்தில் பிரபாகரன் ஊடுறுவியதாக வதந்தி!
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ராமேஸ்வரத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக வெளியான தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இலங்கையில் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் கடுமையாக சண்டை போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ராமேஸ்வரத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக நேற்று திடீரென தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவருடன், புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் வந்துள்ளதாகவும் செய்தி பரவியது. ராமேஸ்வரம் வந்த பிரபாகரன் அங்கிருந்து கோவை போய் விட்டதாகவும், அங்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் செய்தி கூறியது.
ஆனால் இது வெறும் வதந்தி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு பிரபாகரனின் மனைவி மதிவதனி ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளதாக வதந்தி பரவியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications