லண்டன் சிறையில் கருணா மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணா மீது அங்கு அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழர்கள் சிலர் வெந்நீரை ஊற்றி தாக்கியுள்ளனர். இதில் கருணா படுகாயமடைந்தார்.
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாவுக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கருணாவுக்கு அரசியல் கைதி என்ற அந்தஸ்து தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் கருணா தாக்கப்பட்டுள்ளார்.
அங்கு அடைக்கப்பட்டுள்ள சில தமிழர்கள் (அவர்கள் புலிகள் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது) கருணா மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றித் தாக்கியுள்ளனர். இதில் கருணா படுகாயமடைந்துள்ளாராம்.
உடனடியாக சிறை வளாகத்திற்குள் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications