லக்னெள: ரயில்கள் மோதல், டிரைவர் பலி; 28 பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
கெளசிநகர் (உத்தரப்பிரேதசம்): லக்னெள அருகே இன்று காலையில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் ராக மோதிக் கொண்டதில் ரயில் டிரைவர் பலியானார். 28 பேர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலம் தர்பங்கா என்ற இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஜன்நாயக் எக்ஸ்பிரஸ், உத்தரப்பிரதேசம் கெளசிநகர் மாவட்டத்தில் கோதர்வார் ரயில் நிலையத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பயணிகள் ரயிலின் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். 28 பயணிகள் சிறு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஜன்நாயக் எக்ஸ்பிரசின் 2 பெட்டிகள் சேதமடைந்தன.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ரயில் விபத்தால் அப்பகுதியில் இன்று காலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications