அண்ணா நினைவு நாள்: கருணாநிதி தலைமையில் பேரணி
சென்னை: அறிஞர் அண்ணாவின் 39வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதல்வர் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடக்கிறது.
இதுகுறித்து வடசென்னை, தென்சென்னை திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறிவுலக மேதை, நம்மை ஆளாக்கிய அண்ணன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நமக்குத் தந்த ஆசான், திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணாவின் 39வது நினைவு தினம் பிப்ரவரி 3ம் தேதி வருகிறது.
அன்றைய தினம் முதல்வர் கருணாநிதி தலைமையில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் பிப்ரவரி 3ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதற்கு முன்னதாக அமைதிப் பேரணி வாலஜா சாலியில் உள்ள சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் சென்றடையும்.
இந்தப் பேரணியில் திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications